بِفَاطِمَةْ قَدْ صَفَا حَالِي
பாத்திமாவால் என் நிலை தூய்மையானது
Ta
Ta
بِفَاطِمَةْ قَدْ صَفَا حَالِي وَنِلْتُ الْمَرَامْ
بِضْعَة مُحَمَّدْ حَبِيبِ اللهْ خَيْرِ الْأَنَامْ
பாத்திமாவினால் என் நிலை தூய்மையானது, என் இலக்குகள் யாவும் கைகூடின
அல்லாஹ்வின் நேசர் முஹம்மதின் ஒரு பகுதி அவர், மனிதகுலத்தின் மாணிக்கம்
أَعْلَى لَهَا اللهْ قَدْراً فِي الْعُلَا وَالْمَقَامْ
نِعْمَ الْبَتُولْ الْرَّضِيَّةْ نُورْ كُلِّ الْظَّلَامْ
அல்லாஹ் அவளது சிறப்பையும் அந்தஸ்தையும் உன்னத நிலைக்கு உயர்த்தினான்
என்னே சிறப்புமிக்கத் தூயவள், இறைத்திருப்தி பெற்றவள், இருளை அகற்றும் பேரொளி
أُمِّ الْحَسَنْ وَالْحُسَيْنْ أَهْلِ الْمَرْقَى الْعِظَامْ
لَهُمْ عَطَايَا مِنَ الْمَوْلَى كِبَارٌ جِسَامْ
பெரும் உயர்வினை உடைய ஹஸன் மற்றும் ஹுஸைனின் அன்னை
இறைவனிடமிருந்து மகத்தான, பிரம்மாண்டமான கொடைகளைப் பெற்றவர்கள் அவர்கள்
هُمْ سَادَةَ أَهْلِ الْجِنَانِ الْعَالِيَةْ يَا غُلَامْ
مَنْ حَبَّهُمْ صِدِقْ بَا يِسْكُنْ بِدَارِ الْسَّلَامْ
ஓ இளைஞனே, அவர்கள் உயர்ந்த சுவர்க்கவாசிகளின் தலைவர்கள்
அவர்களை உண்மையாய் நேசிப்பவர் சாந்தியின் இல்லத்தில் குடியமர்வார்
وَمَنْ تَعَلَّقْ بِهِمْ يَظْفَرْ بِنَيْلِ الْمَرَامْ
أَكْرَمْتِ يَا بِضْعَةَ أَحْمَدْ فَانْعَمِي بِالْتَّمَامْ
அவர்களுடன் தொடர்பு கொண்டவர் தன் நாட்டங்கள் அனைத்தையும் அடைவார்
அஹ்மதின் ஒரு பகுதியே, நீர் மிகவும் கண்ணியமானவர், உமது அருளைப் பூரணப்படுத்துவீராக
وَامْنَحِي عَبْدَكُمْ فِي الْقُرْبْ أَعْلَى وِسَامْ
نَقُومْ بِحَمِلْ الْرَّيَاتِ الْهُدَ أَحْسَنْ قِيَامْ
உமது அடிமைக்கு இறை நெருக்கத்தின் மிக உயர்ந்த சிறப்பினை வழங்குவீராக
நேர்வழியின் கொடியை மிகச் சிறந்த முறையில் ஏந்தி நிற்கும் பேற்றினைத் தருவீராக
تَعُمْ دَعْوَتُهْ فِي الْأَكْوَانْ كُلِّ الْأَنَامْ
نِلْبَسْ خِلَعْ إِرْثْ مَا يَصِفْ سَنَاهَا كَلَامْ
நபியின் அழைப்பு அகிலத்தின் அனைத்து மாந்தர்களையும் சூழ்ந்திட
வர்ணிக்க இயலா ஒளிமிகுந்த நபித்துவ வாரிசுரிமை எனும் ஆடையை நாங்கள் அணிவோம்
يَا نُورْ قَلْبِي وَيَا أُمِّي عَلَيْكِ الْسَّلَامْ
فِي كُلِّ حَالٍ وَشَأْنٍ كُلِّ لَحْظَةْ دَوَامْ
என் இதயத்தின் ஒளியே, என் தாயே, உம்மீது சாந்தி நிலவட்டும்
எல்லா நிலைகளிலும், எல்லாத் தருணங்களிலும் அது என்றும் நிலைத்திருக்கட்டும்
عَلَيْكِ صَلَّى إِلَهِي مَعَ أَبِيكِ الْإِمَامْ
إِمَامْ كُلِّ الْوَرَى فِي كُلِّ خَاصٍّ وَعَامْ
உமக்கும் உமது தந்தையாகிய இமாமுக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக
படைப்பினங்கள் யாவருக்கும், உயர்குடியினருக்கும் சாமானியருக்கும் அவரே இமாம்
الْشَّافِعِ الْمُبْتَغَ يَوْمَ الْلِّقَاءْ وَالْزَّهَامْ
يَوْمِ الْمَلَائِكْ تُنَادِي جَمِعْ كُلِّ الْأَنَامْ
மறுமைச் சந்திப்பின் அந்த நெரிசலான நாளில் நாடப்படும் பரிந்துரையாளர் அவர்
வானவர்கள் மக்கள் யாவரையும் அழைத்துக்கூறும் அந்த நாளில்
غُضُّوا أَبْصَارَكُمْ تَمُرْ بِنْتِ الْنَّبِيِ بِالْسَّلَامْ
وَنَكِّسُوا رُؤُوسَكُمْ مَا أَعْظَمَهْ وَاللهْ مَقَامْ
"நபியின் மகள் பாதுகாப்பாகக் கடக்கிறார், உங்கள் பார்வைகளைத் தாழ்த்துங்கள்"
"உங்கள் தலைகளைக் குனியுங்கள்", அல்லாஹ்வின் மீது சத்தியமாக, இது என்னே மகத்தான அந்தஸ்து!
تِذَكَرِينِي مَعَكِ أَعْبُرْ وَمَنْ لَهُ ذِمَامْ
حَاشَاكِ يَا أُمَّنَا تِنْسِينْ هَذَا الْغُلَامْ
உம்மோடு நானும் கடந்து செல்ல என்னை நினையுங்கள், உமது அரவணைப்பில் இருப்பவனாய்
எங்கள் தாயே, இந்தச் சிறுவனை நீர் மறப்பது ஒருபோதும் நிகழாது!
مَحْسُوبَكُمْ يَرْتَجِيهْ مِنْكُمْ بِهِ الْإِهْتِمَامْ
أَنْتُمْ مَرَامُهْ وَمَقْصُودُهْ وَنِعْمَ الْمَرَامْ
உம்மைச் சார்ந்த இவன் உமது கருணையை ஆவலோடு எதிர்பார்க்கிறான்
நீங்களே அவனது இலக்கும் விருப்பமும், என்னே ஒரு உயரிய விருப்பம்!
يَا بِنْتَ طه فُؤَادِي فِي مَحَبَّتِكْ هَامْ
وَاللهْ أَنْتُمْ مُرَادِي فِي الْدُّنَا وَالْقِيَامْ
தாஹாவின் மகளே, உமது அன்பில் என் இதயம் லயித்துப் போனது
அல்லாஹ்வின் மீது ஆணையாக, இம்மையிலும் மறுமையிலும் நீங்களே என் நாட்டம்
وَمَا أَنَا إِلَّا بِكُمْ يَا سَادَتِي يَا كِرَامْ
عَلَيْكِ مَعَ وَالِدِكْ أَزْكَى الْصَّلَاةْ وَالسَّلَامْ
கண்ணியமிக்க என் தலைவர்களே, உங்களையல்லாது எனக்கு வாழ்வில்லை
உமக்கும் உமது பெற்றோருக்கும் மிகத் தூய்மையான அருளும் சாந்தியும் உரித்தாகட்டும்
وَأَهْلِ الْكِسَاءْ وَأَهْلِ بَيْتِهْ عَالِيِّينَ الْمَقَامْ
وَالْصَّحْبْ أَجْمَعْ وَمَنْ عَلَى هُدَاهْ اِسْتَقَامْ
போர்வையின் குடும்பத்தினர் மற்றும் உயர் அந்தஸ்துடைய அஹ்லுல்பைத் மீதும்
தோழர்கள் மற்றும் நேர்வழியில் உறுதியாய் நின்றோர் அனைவர் மீதும் அருள் உண்டாகட்டும்